2023-2024ஆம் கல்வியாண்டிற்கான இராணிப்பேட்டை மாவட்டத்தில் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் சிலம்பம் மற்றும் கேரம் போட்டிகளில் மாணவ மாணவியர்களை பங்கேற்க தகவல் தெரிவித்தல் – சார்பு

சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள்

அரசு/ தொடக்க பள்ளி/நிதியுதவி/ மெட்ரிக் பள்ளிகள்,

வேலூர் மாவட்டம்.

2023 -2024ஆம் கல்வியாண்டிற்கான இராணிப்பேட்டை மாவட்டத்தில் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் சிலம்பம் மற்றும் கேரம் போட்டிகள் 19.01.2024 முதல் 22.01.2024 வரை நடைபெற உள்ளது. அதன்பொருட்டு வேலூர் மாவட்டத்தின் சார்பாக மாவட்ட அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவ மாணவியர்களை உரிய பாதுகாப்புடன் அழைத்து சென்று போட்டியில் பங்கேற்க செய்ய உடற்கல்வி ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தும்படி சார்ந்த தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. மேலும் போட்டியின் விவரங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

முதன்மைக் கல்வி அலுவலர்,வேலூர்.