2019-20ஆம் ஆண்டிற்கான வினாத்தாள் அச்சிடும் பொருட்டு தங்கள் பள்ளியில் பயிலும் மாணவ/மாணவியர்களின் எண்ணிக்கை விவரம் கோருதல்

அனைத்து உயர்/ மேல்நிலைப்பள்ளி (மெட்ரிக் பள்ளிகள் உட்பட) தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கவனத்திற்கு,

2019-20ஆம் ஆண்டிற்கான வினாத்தாள் அச்சிடும் பொருட்டு தங்கள் பள்ளியில் பயிலும் மாணவ/மாணவியர்களின் எண்ணிக்கை விவரத்தை இணைப்பில் கொடுக்கப்பட்ட படிவத்தில் தவறின்றி மூன்று நகல்கள் தயார் செய்து ஒன்றைப் பள்ளியில் அலுவலக நகலாக வைத்துக்கொண்டு இரு நகல்களை தங்கள் வினாத்தாள் எடுக்கும் வினியோக மையத்திற்கு 29.07.2019 மாலை 3.00 மணிக்கு தவறாது அனுப்பிவைக்குமாறு அறிவிக்கப்படுகிறார்கள்.

வினாத்தாள் கட்டுகள் எடுக்கும் பொருட்டு தங்களுக்கு வசதியான மையத்தை தெளிவாக குறித்தல் வேண்டும் (மையங்கள் கீழே அச்சிடப்பட்டுள்ளது).

வினாத்தாள் பகிர்வு மைய தலைமையாசிரியர்கள் படிவத்தைப் பெற்றுக்கொண்டு தொகுத்து தனிநபர் மூலம் காட்பாடி, காந்திநகர், எஸ்.எஸ்.ஏ. அலுவலகத்தில் அன்றே (29.07.2019) மாலை 5.30க்குள் வினாத்தாள் ஒருங்கிணைப்பாளரிடம் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE FORMS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.