14.07.2019 அன்று நடந்த தேர்தல் வகுப்பில் கலந்துகொள்ளாத ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு, வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் வழங்கப்பட்டுள்ள காரணம் கேட்கும் குறிப்பாணை (Showcause Notice) சார்ந்து 24 மணி நேரத்திற்குள் பதில் கோருதல்

/தேர்தல் மிகமிக அவசரம்/

 

  • சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள்/ ஆசிரியர்கள், ஆசிரியரல்லாத பணியாளர்கள்,
  • அனைத்து மாவட்டக்கல்வி அலுவலர்கள்,
  • அனைத்து வட்டாரக்கல்வி அலுவலர்கள்,

 

வேலூர் மாவட்டத்தில் 14.07.2019 அன்று நடந்த தேர்தல் வகுப்பில் கலந்துகொள்ளாத ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு, வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் காரணம் கேட்கும் குறிப்பாணை (Showcause Notice) வழங்கப்பட்டுள்ளது. அதனை இன்றே பள்ளிக்கல்விக்கல்வித்துறையினைச் சார்ந்த ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் சார்ந்த மாவட்டக்கல்வி அலுவலகங்களிலும், தொடக்கக்கல்வித் துறையினை சார்ந்த ஆசிரியர்கள் சார்ந்த வட்டாரக்கல்வி அலுவலகங்களிலும் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள், கடிதம் பெற்ற 24 மணி நேரத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என்பதால், காலதாமதம் ஏற்பட்டால் சார்ந்தவர்களே முழு பொறுப்பேற்க நேரிடும் என தெரிவிக்கப்படுகின்றது.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.