13.10.2019 அன்று பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு பேரணி மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறுதல் மற்றும் தாலுக்கா அளவில் நடைபெறுதல்

அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,

13.10.2019 அன்று பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு பேரணி மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறவுள்ளது.

மேலும், மாவட்ட ஆட்சியர் ஆணைப்படி வட்ட  (தாலுக்கா) தலைமையிட பள்ளி அளவில்  வட்டாட்சியர் தலைமையில் பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு பேரணி நடத்திட மாவட்ட ஆட்சியர் ஆணையிட்டுள்ளார். எனவே, சார்ந்த வட்டாட்சியர்கள் விழிப்புணர்வு பேரணி நடத்திடுதல் சார்பாக பள்ளி தலைமையாசிரியர்களை அணுகும்போது மாணவர்கள் விழிப்புணர்வு பேரணியில் கலந்துகொள்ளும் வகையில் பொறுப்பான ஆசிரியர்களை நியமித்தும் பள்ளி சரண ஆசிரியர், நாட்டுநலப்பணி திட்ட அலுவலர், இளஞ்செஞ்சிலுவை ஆலோசகர் ஆகியோருடன் பாதுகாப்பாக அனுப்பிவைக்கும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.