11.04.2023 (இன்று) முதல் புனித மரியன்னை மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறவுள்ள மேல்நிலைத்தேர்வு விடைத்தாள் திருத்தும் முகாமிற்கு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர்கள் தங்கள் பள்ளியில் பணிபுரியும் அனைத்து பாட முதுகலை ஆசிரியர்களை விடுவிக்க தெரிவித்தல்

அனைத்து மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு,

            11.04.2023 (இன்று)  முதல் புனித மரியன்னை மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறவுள்ள மேல்நிலைத்தேர்வு விடைத்தாள் திருத்தும் முகாமிற்கு தங்கள் பள்ளியில் பணிபுரியும் அனைத்து பாட முதுகலை ஆசிரியர்களையும்  முகாமில் பணியேற்கும் வகையில் 11.04.2023 அன்று காலை 8.30 க்கு முகாமிற்கு வருகைபுரியும் வகையில் விடுவித்தனுப்புமாறு அனைத்து அரசு/ நகரவை/அரசு நிதியுதவி/ ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

            முதுகலை ஆசிரியர்கள் வருகைபுரியும்போது இணைப்பில் உள்ள விடுவிப்பு சான்றுடன் வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLAOD THE CERTIFICATE

ஓம்/-க.முனுசாமி,

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.