வேலூர் மாவட்டம்-ஆசிரியர் கல்வி – மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் –இயற்பியல், உயிரியல், வேதியியல், கணிதம் கற்பிக்கும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பயிற்சி –  பணிவிடுவிப்பு செய்யக் கோருதல் – சார்பு.

வேலூர் மாவட்டம்- மேல்நிலை வகுப்புகள் கற்பிக்கும் அனைத்து முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு திறன் வளர்ப் பயிற்சி அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு திட்டமிடப்பட்டுள்ளது.   மேலும், பாட வாரியாக(இயற்பியல், வேதியியல், கணிதம் மற்றும் உயிரியல்) அனைத்து முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் மேல்நிலை வகுப்பு  பாடநூல்களை பயிற்சிக்குஉடன் எடுத்து வருமாறு அறிவுறுத்தப்படுகிறது. எனவே,பாட வாரியாக அனைத்து முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை உரிய தேதிகளில் பணிவிடுவிப்பு செய்ய அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெரும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுகொள்ளபடுகிறார்கள்.

ஓம்.செ.மணிமொழி

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்.

பெறுநர்

அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெரும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள்.