விலையில்லா மடிக்கணினிகள் – 2017-2018 முதல் 2019-2020 வரை மாணாக்கர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள் பெறப்பட்டது, வழங்கப்பட்டது மற்றும் மீதமுள்ள மடிக்கணினிகள் விவரங்கள் சமர்ப்பிக்காத பள்ளித் தலைமையாசிரியர்களின் கவனத்திற்கு

அரசு/அரசு உதவி பெறும் /வனத்துறை/ஆதிதிராவிடர் நல/நகராட்சி மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு

சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை இயக்குநர் அவர்களின் தலைமையில் 24.01.2020 அன்று நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில் அரசு/அரசுதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகளில் (சுயநிதிப்பிரிவு நீங்கலாக) விலையில்லா மடிக்கணினி பெற தகுதியுடைய மாணாக்கர்களுக்கு வழங்கப்பட்ட விலையில்லா மடிக்கணினிகள் விவரத்தினை இத்துடன் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் உள்ள இரண்டு படிவங்களிலும் உள்ளீடு செய்துவிட்டு (எந்த கலமும் விடுபடாமல்) படிவங்களை 28.01.2020 அன்று மாலை 04.00 மணிக்குள் இவ்வலுவலக ஈ3 பிரிவில் சமர்ப்பிக்குமாறு அனைத்து  அரசு/அரசு உதவி பெறும் /வனத்துறை/ஆதிதிராவிடர் நல/நகராட்சி மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்களிடம் கோரப்பட்டது.

நாளது தேதி வரை பல பள்ளிகளில் இருந்து விவரங்கள் பெறப்படவில்லை. விவரங்கள் சமர்ப்பிக்காத பள்ளித்தலைமையாசிரியர்கள் இன்று (29.01.2020) காலை 11.00 மணிக்குள் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர்,

வேலூர்

CLICK HERE TO DOWNLOAD THE FORMATS

CLICK HERE TO ENTER THE DETAILS