மேல்நிலை முதலாமாண்டு செய்முறைத் தேர்வு பிப்ரவரி 2024 – மந்தன கட்டுக்கள் வழங்குதல்-சார்பு

அனைத்து வகை மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

மேல்நிலை முதலாமாண்டு செய்முறைத் தேர்வு பிப்ரவரி 2024  – மந்தன கட்டுக்கள்    13.02.2024 அன்று  காலை 10.00 மணி முதல் வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் தனி நபர் மூலம் உரிய முகப்புக் கடிதத்துடன்   பெற்றுக்கொள்ளுமாறு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்களுக்கு தெரிவிக்கலாகிறது.

குறிப்பு

இணைப்பில் காணும் இணைப்பு பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் தங்கள் பள்ளி செய்முறைத் தேர்வு இணைப்பு பள்ளியாக செயல்படுவதால், மந்தனக் கட்டுகள்  பெற வருகை புரிய  தேவையில்லை எனவும்  செய்முறைத் தேர்வு மையத்தினை தொடர்பு கொள்ளுமாறும்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

ஒப்பம் செ.மணிமொழி

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்.

பெறுநர்

அனைத்து வகை மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர்கள்

நகல்

மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை/தனியார்)  வேலூர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர்நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.