மேல்நிலை பொதுத் தேர்வு மார்ச் 2019 – மாணவர்கள் பெயர் பட்டியலில் திருத்தங்கள் இருப்பின் விவரங்கள் கோருதல்

அனைத்து வகை  மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

நடைபெற்று முடிந்த மேல்நிலை  முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வு மார்ச் 2019 தொடர்பான  மாணவர்கள் பெயர் பட்டியலில் திருத்தங்கள் இருப்பின் (உதாரணத்திற்கு  மாணவனின் பெயர், பிறந்த தேதி, பள்ளியில் பெயர்) அதன் விவரத்தினை பெயர் பட்டியலில் சிகப்பு மையால் திருத்தம் குறிப்பிட்டு 28-03-2019 அன்று மாலைக்குள் வேலுர்மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் பி5 பிரிவு எழுத்தரிடம் நேரில் ஒப்படைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு  அனைத்து வகை  மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  இத்துடன் சென்னை அரசுத் தேர்வுகள் இயக்குநரின் கடிதம் நகல் இணைக்கப்பட்டுள்ளது அக்கடிதத்தில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாய்ப்பினை இறுதி வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். காலம் தாழ்த்தி பெறப்படும் திருத்தங்களுக்கு தலைமை ஆசிரியரே முழுப்பொறுப்பாவார்கள் என திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது.

NR – correction Final Chance

முதன்மைக் கல்வி அலுவலர்,

வேலுர்.

 

பெறுநர்,

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்

 

நகல்

மாவட்டக் கல்வி அலுவலர்

அரக்கோணம் / இராணிப்பேட்டை / வேலுர் / வாணியம்பாடி / திருப்பத்துர் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.