மிக மிக அவசரம் – விலையில்லா மிதிவண்டிகள் பெற்று வழங்கப்பட்டது – 2020-21 – நிலுவை / இருப்பு விவரம் – இதுவரை சமர்ப்பிக்காத 31 பள்ளிகள் (இணைப்பில் உள்ளது) சமர்ப்பிக்க தெரிவித்தல் சார்பாக.

           வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு 2020-21ஆம் கல்வியாண்டில் 11ஆம் வகுப்பு பயின்ற மாணவ / மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் பெற்று வழங்கப்பட்டது. தேவை இருப்பின் நிரவல் செய்து வழங்கப்படும். இருப்பு இருப்பின் தெரிவிக்க வேண்டும். எனவே இதுவே இறுதி வாய்ப்பு. அடுத்த வருடம் இருப்பு வைக்க வேண்டாம். எனவே சரியான விவரத்தினை தலைமை ஆசிரியரின் கையொப்பமிட்டு இன்று 11.08.2021 மாலை 5.45க்குள் சமர்ப்பிக்குமாறும், தேவை / இருப்பு – இல்லை எனினும் “இன்மை” அறிக்கை தவறாமல் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

ஆனால், இதுநாள் வரை இணைப்பில் கண்ட தலைமையாசிரியர்கள் விவரம் வழங்கப்படவில்லை. இது மிகவும் வருந்தத்தக்கது. இதனால் விலையில்லா மிதிவண்டி இருப்பு பெற்றுக்கொள்வதில் தாமதம் ஏற்படுகிறது.            

எனவே, உடனடியாக தாமதத்திற்கான காரணத்துடன் இருப்பு மற்றும் தேவைவிவரத்தை கொடுக்கப்பட்டுள்ள படிவத்தில் இன்று (13.08.2021) மாலை 4.00 மணிக்குள் இவ்வலுவலக ‘அ4‘ பிரிவில் நேரில் ஒப்படைக்குமாறு சார்ந்த தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்