பள்ளிக்கல்வி – உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள் கூட்டம் நடைபெறுதல் – தொடர்பாக.

அனைத்து அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நல/நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு

வேலூர் மாவட்டத்தில் பணிபுரியும் அனைத்து அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நல/நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான கூட்டம் கீழ்க்கண்ட அட்டவணையின் படி முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையில் 24. 7. 2023 அன்று நடைபெறும். எனவே தலைமை ஆசிரியர்கள் மற்றும் பொறுப்பு தலைமை ஆசிரியர்கள் தவறாமல் மிக சரியாக குறிப்பிட்ட நேரத்திற்குள் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்

மாலை 3 முதல் 4 மணி வரை அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள்

மாலை 4 முதல் 5 மணி வரை அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள்

கூட்டம் நடைபெறும் இடம் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி (SSA) காந்திநகர் ,காட்பாடி.

//ஓம். செ. மணிமொழி//
முதன்மைக்கல்வி அலுவலர்
வேலூர்

பெறுநர்
1.அனைத்து அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நல/நிதியுதவி, உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், வேலூர் மாவட்டம்.

2.ஒருங்கிணைப்பாளர்
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, காந்திநகர் ,வேலூர்.

நகல்

மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை/தனியார்) அவர்களுக்கு தகவலுக்காகவும் மற்றும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பப்படுகிறது