நினைவூட்டு  – மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு -மார்ச்  2023  – DCS REPORT –சமர்பிக்காத பள்ளிகள்  உடன் சம்ற்பிக்க தெரிவித்தல் -சார்பு

அனைத்து மேல்நிலைப் பள்ளிதலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

 மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு மார்ச்  2023  தொடர்பாக  தேர்வு மையம் வாரியாக   DCS Report 08.12.2022 வேலூர் முதன்மைக் கல்வி அலுவலக இணையத்தில் வெளியிடப்பட்டது.

தேர்வு மைய பள்ளிகள் விவரம், மற்றும் இணைப்பு பள்ளிகள் விவரம் போன்றவைகளில் திருத்தம் இருப்பின் உடன் வேலுர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக தேர்வுகள் பிரிவு எழுத்தரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் தங்கள் பள்ளி சார்பான விவரங்கள் சரியாக இருப்பின் Verified and Found Correct என பதிவு மேற்கொண்டு தலைமைஆசிரியரின் முத்திரை மற்றும் கையொப்பத்துடன் இவ்வலுவலகத்திற்கு ஒரு நகல் தவறாமல் சமர்பிக்க கேட்டுக்கொள்ளப்பட்டது. ஆனால் இதுநாள் வரை கீழ்க்காணும் பள்ளிகள் சமர்பிக்காதது வருந்தத்தக்கது. அரசுத் தேர்வுகள் இயக்ககத்திற்கு சமர்பிக்க வேண்டி உள்ளதால் இன்று மாலை 3.00 மணிக்குள் வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக ஆ4 பிரிவில் சமர்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தொடர்புக்கு : 8825004447 /9791888163

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலுர்

பெறுநர்

அனைத்து மேல்நிலைப் பள்ளிதலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்

நகல்

மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார் )  வேலுர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.