நினைவூட்டல் – மிக மிக அவசரம் – அரசு / அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளிகளில் 2017-18 மற்றும் 2018-19 ஆம் கல்வியாண்டுகளில் பனிரெண்டாம் வகுப்பு கல்வி பயின்று பள்ளியை விட்டுச் சென்ற மாணவர்கள் தற்போதைய நிலை மற்றும் பயின்று வரும் உயர்கல்வி விவரங்களை கல்வித் தகவல் மேலாண்மை இணையதளத்தில் (EMIS WEB PORTAL) நாளை (05.10.2019) மாலை 5.00 மணிக்குள் உள்ளீடு செய்து முடிக்க கோருதல்

அரசு / அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

அரசு / அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளிகளில் 2017-18 மற்றும் 2018-19 ஆம் கல்வியாண்டுகளில் பனிரெண்டாம் வகுப்பு கல்வி பயின்று பள்ளியை விட்டுச் சென்ற மாணவர்கள் தற்போதைய நிலை மற்றும் பயின்று வரும் உயர்கல்வி விவரங்களை கல்வித் தகவல் மேலாண்மை இணையதளத்தில் (EMIS WEB PORTAL) நாளை (05.10.2019) மாலை 5.00 மணிக்குள் உள்ளீடு செய்து முடிக்கும்படி அனைத்து அரசு / அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தவறும்பட்சத்தில் அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியரே முழுபொறுப்பேற்க நேரிடும் என தெரிவிக்கலாகிறது.

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.