நாளை (01.03.2019) முதல் நடைபெறவுள்ள மேல்நிலைப் பொதுத்தேர்வு சார்பான அறிவுரைகள்

  அனைத்து தலைமையாசிரியர்/ ஆசிரியர்/ அலுவலகப்பணியாளர்கள் கவனத்திற்கு, 

           நாளை (01.03.2019) முதல் நடைபெறவுள்ள மேல்நிலைப் பொதுத்தேர்வு சார்பான தேர்வுப்பணி ஆணை பெறப்பட்டுள்ள அனைத்து முதன்மைக்கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், அறை கண்காணிப்பாளர்கள், வினாத்தாள் கட்டுக்காப்பாளர்கள், வழித்தட அலுவலர்கள், பறக்கும்படை உறுப்பினர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் அனைவரும் உரிய நேரத்தில் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தேர்வுப்பணியினை செம்மையாக மேற்கொண்டு தேர்வின் மந்தனத் தன்மையை கடைபிடித்து அரசுத் தேர்வுத்துறையினை வழிகாட்டுதல்களை பின்பற்றி அனைத்துத் தேர்வுகளையும் சிறப்பாக நடத்த அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.