நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தல் பணி மேற்கொள்ள ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு தேர்தல் பணி ஆணையினை 15.03.2021 அன்று காலை 10.00 மணிக்கு வேலூர் மாவட்டக்கல்வி அலுவலகத்தில் சம்மந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர்கள் தனி நபர் மூலம் பெற்றுக்கொள்ள தெரிவித்தல்

அனைத்துவகை அரசு/நகரவை/ ஆதிதிராவிடர் நல/ நிதியுதவிப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தல் பணி மேற்கொள்ள ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு தேர்தல் பணி ஆணையினை  15.03.2021 அன்று காலை 10.00 மணிக்கு வேலூர்  மாவட்டக்கல்வி அலுவலகத்தில் வழங்கப்படவுள்ளதால், தலைமையாசிரியர்கள் தனி நபர் மூலம் பெற்றுக்கொள்ளுமாறு அனைத்துவகை அரசு/நகரவை/ ஆதிதிராவிடர் நல/ நிதியுதவிப் பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.       பணி ஆணையினை பெற்றுச்செல்ல வரும் நபரிடம் தங்கள் பள்ளி ஆசிரியர் வருகைப்பதிவேடு நகல் மற்றும் ஆசிரியரல்லாதோர் வருகைப்பதிவேடு நகல் ஆகியவற்றை  வேலூர், மாவட்டக்கல்வி அலுவலரிடம் சமர்ப்பிக்குமாறு தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    மேலும், தேர்தல் பணி ஆணையினை சம்மந்தப்பட்ட ஆசிரியர் / ஆசிரியரல்லாத பணியாளருக்கு வழங்கி ஒப்புகைச்சீட்டினை 15.03.2021 அன்று மாலை 5.00 மணிக்குள் தனி நபர் மூலம் மாவட்டக்கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு அனைத்துவகை அரசு/நகரவை/ ஆதிதிராவிடர் நல/ நிதியுதவிப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்