தேர்வுகள் -2022-2023 ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு /மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வுகள் -தேர்வுக் கட்டணம் மற்றும் TML கட்டணம் செலுத்த கூடுதல் அவகாசம் -வழங்குதல் -சார்பு

அனைத்து வகை உயர்நிலை/மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் முதல்வர்கள் கவனத்திற்கு

2022-2023 ஆம் கல்வியாண்டிற்கானபத்தாம் வகுப்பு /மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வுக்கான கட்டணம் மற்றும் TML கட்டணம் செலுத்த 14.12.2022 முதல் 28.12.2022 வரையிலான நாட்களில் இணையதளம் மூலம் செலுத்த அறிவுறுத்தப்பட்டது.

எனினும் இணைப்பில் காணும் பள்ளிகள் பத்தாம் வகுப்பு,மேல்நிலை முதலாமாண்டு பொதுத்தேர்வுக்கான தேர்வுக் கட்டணம் மற்றும் TML கட்டணத்தினை செலுத்த வில்லை என தெரிய வருகிறது.

ஆகையால் இணைப்பில் காணும் பள்ளிகள் 12.01.2023 அன்று மாலை 3.00 மணிக்குள் உரிய தேர்வுக் கட்டணம் மற்றும் TML கட்டணத்தினை இணையதளம் மூலம் செலுத்தி அதன் நகலினை வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக ஆ4 பிரிவில் சமர்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் காலதாமதத்தினை தவிர்த்து உரிய தேதிக்குள் கட்டணம் செலுத்துமாறு மீள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

ஒப்பம்

க.முனுசாமி

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்

பெறுநர்

சார்ந்த உயர்/மேல்நிலைப்பள்ளிதலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள், வேலூர் மாவட்டம் .

நகல்

வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) தொடர்நடவடிக்கையின் பொருட்டு

வேலூர் மாவட்ட கல்வி அலுவலர்(தனியார்) தொடர்நடவடிக்கையின் பொருட்டு