தேர்வுகள் –வேலூர் மாவட்டம் –மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டமை -தேர்ச்சி விகிதம் -குறைவான பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான ஆய்வுக் கூட்டம் – தெரிவித்தல்-சார்பு

சார்ந்த மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு

தேர்ச்சி விகிதம் கடந்த 2022 ஆண்டு பொதுத் தேர்விற்கும் நடைபெற்று முடிந்த மார்ச் /ஏப்ரல் -2023 மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்விற்கும் குறைவான தேர்ச்சி அடைந்த கீழ்க்காணும் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கான ஆய்வுக் கூட்டம் 16.05.2023(செவ்வாய் கிழமை ) காலை 10.00 மணியளவில் காந்தி நகர் Samargara Shiksha (SSA) அரங்கில் ஆய்வுக் கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது.

மேலும் மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் பொதுத்தேர்வு -மார்ச் /ஏப்ரல் -2023 தேர்ச்சி விகிதம் 80% கீழ் குறைவான கீழ்காணும் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான ஆய்வுக்கூட்டம் 16.05.2023 (செவ்வாய் கிழமை ) மாலை 4.00 மணியளவில் காந்தி நகர் Samargara Shiksha (SSA) அரங்கில் ஆய்வுக் கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது.

ஒப்பம்

க.முனுசாமி

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்

பெறுநர்

சார்ந்த மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் வேலூர் மாவட்டம்

நகல்

வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை) அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர்நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது