தமிழ் மொழி இலக்கிய திறனறித்தேர்வு அக்டோபர் 2022 – வினாத்தாள் கட்டுக்காப்பாளர்கள் / முதன்மைக் கண்காணிப்பாளர்கள் / துறை அலுவலர்கள் / வழித்தட அலுவலர்களுக்கான கூட்டம்

இணைப்பில் காணும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதுகலை ஆசிரியர்கள் கவனத்திற்கு

தமிழ் மொழி இலக்கிய திறனறித்தேர்வு அக்டோபர் 2022 – வினாத்தாள் கட்டுக்காப்பாளர்கள் / முதன்மைக் கண்காணிப்பாளர்கள் / துறை அலுவலர்கள் / வழித்தட அலுவலர்களுக்கான கூட்டம் வேலூர், சத்துவாச்சாரி, ஹோலிக்கிராஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி கூட்ட அரங்கில் 11-10-2022 காலை 10.00 மணியளவில் வேலூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் தலைமையில் மாவட்டக் கல்வி அலுவலர்கள் பங்கேற்கவுள்ளனர். கூட்டத்திற்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதுகலை ஆசிரியர்கள் தவறாமல் கலந்துக்கொள்ள வேண்டும். கூட்டத்திற்கு வருகை புரியும் பொழுது தங்களுக்கு அலைபேசியில் தெரிவித்துள்ள தேர்வு மையத்திற்குண்டான பெயர் பட்டியல் ( Nominal Roll) ஒரு நகலினை எடுத்துவருமாறும் தெரிவிக்கப்படுகிறது.

முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர்

பெறுநர்

இணைப்பில் காணும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதுகலை ஆசிரியர்கள்

நகல்

மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை ) அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது

மாவட்டக் கல்விஅலுவலர் ( தனியார் பள்ளிகள் ) அவர்களுக்கு தகவலுக்காக அனுப்பலாகிறது

மாவட்டக் கல்வி அலுவலர் ( தொடக்கக் கல்வி) அவர்களுக்கு தகவலுக்காக அனுப்பலாகிறது

அரசுத் தேர்வுகள் உதவிஇயக்குநர் கல்புதூர் அவர்களுக்கு தகவலுக்காக அனுப்பலாகிறது