செப்டம்பர் 2019 காலாண்டுத்தேர்வில் 80 விழுக்காட்டிற்கு குறைவாக பெற்ற தமிழ் பட்டதாரி ஆசிரியர்களுக்கான கூட்டம் 12.10.2019 அன்று காட்பாடி, காந்திநகர்,SSA கூட்ட அரங்கில் நடைபெறுதல்- பட்டியலில் உள்ள ஆசிரியர்கள் கலந்துகொள்ள தெரிவித்தல்

சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் (பட்டியல்கள்  இணைக்கப்பட்டுள்ளதன),

செப்டம்பர் 2019 காலாண்டுத்தேர்வில் 80 விழுக்காட்டிற்கு குறைவாக பெற்ற தமிழ் பட்டதாரி ஆசிரியர்களுக்கான கூட்டம் 12.10.2019 அன்று காட்பாடி, காந்திநகர்,SSA கூட்ட அரங்கில் நடைபெறுதல்- பட்டியலில் உள்ள ஆசிரியர்கள் கலந்துகொள்ள தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள பட்டியலின்படி

வேலூர், அரக்கோணம் மற்றும் இராணிப்பேட்டை கல்வி மாவட்டத்தை சார்ந்த 80 விழுக்காட்டிற்கு குறைவாக பெற்ற தமிழ் பட்டதாரி ஆசிரியர்களுக்கான கூட்டம்  12.10.2019 அன்று காலை 10.00 மணிக்கு நடைபெறும்.

திருப்பத்தூர் மற்றும் வாணியம்பாடி கல்வி மாவட்டத்தை சார்ந்த 80 விழுக்காட்டிற்கு குறைவாக பெற்ற தமிழ் பட்டதாரி ஆசிரியர்களுக்கான கூட்டம் 12.10.2019 அன்று  நன்பகல் 12.00 மணிக்கு நடைபெறும்.

சார்ந்த ஆசிரியர்களை உரிய நேரத்தில் தவறாமல் கூட்டத்தில் கலந்துகொள்ளும்வகையில் தலைமையாசிரியர்கள் விடுவித்தனுப்ப கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும், இன்னும் விவரங்களை உள்ளீடு செய்யாத பள்ளிகள் பட்டியல் கீழே இணைக்கப்பட்டுள்ளது. சார்ந்த தலைமையாசிரியர்கள் உடனே விவரங்களை உள்ளீடு செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தங்கள் பள்ளியில் தமிழ் பாடத்தில் 80 விழுக்காட்டிற்கு  குறைவாக பெற்றிருப்பின் சார்ந்த தமிழ் பட்டதாரி ஆசிரியர்களை கூட்டத்தில் கலந்துகொள்ளும்வகையில் அனுப்பிவைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD LIST OF VELLORE, ARAKKONAM AND RANIPET EDUCATIONAL DISTRICT TEACHERS

CLICK HERE TO DOWNLOAD THE LIST OF TIRUPATTUR AND  VANIYAMBADI EDUCATIONAL DISTRICT TEACHERS

CLICK HERE TO DOWNLOAD THE LIST OF SCHOOLS NOT ENTERED THE DETAILS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.