ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி – வேலூர் மாவட்டம் – 2021-2022ஆம் கல்வியாண்டு அனைத்து அரசு பள்ளி மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பு வழிகாட்டுதல்கள்

அனைத்துவகை அரசு பள்ளி தலைமையாசிரியர்கள்/ வட்டாரக்கல்வி அலுவலர்கள்,

மாநிலம் தழுவிய பள்ளி மேலாண்மைக்குழு சார்ந்த பெற்றோருக்கான விழிப்புணர்வு கூட்டம் 20.03.2022 அன்று காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை நடைபெறுகிறது. இதற்கான அழைப்பிதழை பள்ளியில் பயிலும் மணவர்களின் மூலம் அவர்களின் பெற்றோர்களுக்கு 18.03.2022 (வெள்ளிக்கிழமை)க்குள் அனுப்பிவைக்க வேண்டும். பள்ளி மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பு வழிகாட்டுதல்களை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து அரசு பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும்

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்