உடல் வெப்பமானிக் கருவி வழங்குதல் தொடர்பான செய்தி

வேலுர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் உடல் வெப்ப மானிக் கருவி வழங்கிய தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு

கொரானா தொற்றுநோய் பரவாமலிருப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளில் வருகை புரியும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு உடல் வெப்ப மானிக் கருவியின் உதவியிடன் உடல்வெப்பத்தினை கண்டறிவதற்காக வேலுர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் 31.08.2021 அன்று காலை 10.00 மணி முதல் பிற்பகல் 03.00 மணிவரை உடல் வெப்பமானிக் கருவி பள்ளிகளுக்கு வழங்கப்படவுள்ளது. ஏற்கனவே பள்ளிகளில் பயன்படுத்திய உடல்வெப்ப மானிக் கருவியினை முதன்மைக் கல்வி அலுவலகத்தில் ஒப்படைத்திருந்தால் மேற்குறிப்பிட்டுள்ள நாளில் உரிய முகப்புக் கடித்துடன் தனி நபர் அனுப்பி உடல் வெப்ப மானிக் கருவினை ஆ4 பிரிவி எழுத்தரிடம் பெற்றுக் கொள்ளுமாறு தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர்

பெறுநர்

ஏற்கனவே வேலுர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் உடல் வெப்ப மானிக் கருவி வழங்கிய தலைமை ஆசிரியர்கள்

நகல்

மாவட்டக் கல்வி அலுவலர் வேலுர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர்நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.