அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கான நாளை (20.02.2021) அன்று காலை 8.45 மணிக்கு சென்னை, சாந்தோம் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுவதாக இருந்த உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவிக்கான கலந்தாய்வு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

அனைத்து அரசு/ நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

அரசு/நகரவை உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்கள், அதனையொத்த பணிநிலையிலுள்ள ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பதவியிலிருந்து பதவி உயர்வு மூலம் முதுகலை  ஆசிரியர்களாகப் பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு/ பணிமாறுதல் மூலம் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவிக்கு 20.02.2021 அன்று காலை 8.45 மணிக்கு சென்னை, சாந்தோம் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுவதாக இருந்த கலந்தாய்வு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

 

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்