அனைத்து மாவட்ட மற்றும் வட்டாரக்கல்விஅலுவலர்களுக்கு தேர்தல் சார்ந்த சுற்றறிக்கை

/தேர்தல் அவசரம்/

அனைத்து மாவட்ட மற்றும் வட்டாரக்கல்விஅலுவலர்கள் கவனத்திற்கு,

  • தேர்தல் பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ளாதவர்களுக்கு வழங்கப்பட்ட காரணம் கேட்கும் குறிப்பாணை ( Showcause Notice) உரியவர்களுக்கு வழங்கப்பட்டதற்கான ஒப்புகைச்சீட்டு நாளை காலை 11.00 மணிக்குள் இவ்வலுவலக ‘ஈ4’ பிரிவில் ஒப்படைக்க வேண்டும்.
  • தேர்தல் பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ளாதவர்களுக்கு வழங்கப்பட்ட காரணம் கேட்கும் குறிப்பாணை ( Showcause Notice) உரியவர்களிடமிருந்து விளக்கம் பெற்று அதனை நாளை காலை 11.00 மணிக்குள் இவ்வலுவலக ‘ஈ4’ பிரிவில் ஒப்படைக்க வேண்டும்.
  • திருத்திய தேர்தல் பயிற்சி வகுப்பு (18.07.2019)-க்கான ஆணை வழங்கப்பட்டதற்கான ஒப்புகைச்சீட்டு உரியவர்களிடமிருந்து பெற்று அதனை நாளை காலை 11.00 மணிக்குள் இவ்வலுவலக ‘ஈ4’ பிரிவில் ஒப்படைக்க வேண்டும்.
  • உள்நோயாளி (Inpatient)/ இறந்தவர்கள்/ ஓய்வுபெற்றவர்கள்/ இரண்டு தேர்தல் ஆணை பெற்றவர்கள் விவரங்கள் மட்டும் (வேறு எந்த காரணத்தையும் சேர்க்கக்கூடாது) தனியாக தொகுத்து அசல் ஆணையுடன் நாளை காலை 11.00 மணிக்குள் இவ்வலுவலக ‘ஈ4’ பிரிவில் ஒப்படைக்க வேண்டும்.
  • 07.2019அன்று நடைபெறும் பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ளாதவர்கள் மீது துறை நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதால் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள சுற்றறிக்கை அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
  • மேற்கண்ட பயிற்சி நாளில் அனைத்து சார்பு அலுவலக அலுவலர்களும் பணியாளர்கள் பயிற்சியில் கலந்துகொள்வதை உறுதிசெய்யும்பொருட்டு சார்ந்த பயிற்சி நடக்கும் இடங்களுக்கு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களை அனுப்பி உறுதிசெய்தல் வேண்டும்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.