மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் ஆணைப்படி – அனைத்து தலைமையாசிரியர், ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களும் எந்த வித விடுப்பும் 05.08.2019 வரை எடுக்க வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது

அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் கவனத்திற்கு,

நடைபெறவுள்ள வேலூர் பாராளுமன்ற தேர்தல் வகுப்புகள் நடைபெறுவதால் மற்றும்  தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் (தொடக்கக்கல்வி உட்பட)  செயல்படும் அனைத்துவகை பள்ளி  தலைமையாசிரியர், ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களும் சிறு விடுப்பு (CL) தவிர  எந்த வித விடுப்பும் 05.08.2019 வரை எடுக்க வேண்டாம் என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

பள்ளிக்கல்வித்துறையின் கீழ் (தொடக்கக்கல்வி உட்பட)  செயல்படும் அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் எவ்வித சிறு விடுப்பு (CL) தவிர விடுப்பும் எடுக்க வேண்டாம் எனவும் மற்றும் தங்கள் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கும் சிறு விடுப்பு (CL) தவிர எவ்வித விடுப்பும் அனுமதிக்க வேண்டாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர்.