அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்களுக்கு – காலாண்டு/ முதல் பருவத்தேர்வுகள் நடத்துதல் சார்பான அறிவுரைகள்

அனைத்துவகை பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு,

காலாண்டு/ முதல் பருவத்தேர்வுக்குரிய வினாத்தாட்களை ஒவ்வொரு நாளும், வினாத்தாள் கட்டுக்காப்பாளரிடமிருந்து, பொறுப்பான நபரை அனுப்பி பெற்றுக்கொண்டு எவ்வித புகாருக்கும் இடமின்றி தேர்வுகளை செம்மையாகநடத்த அறிவிக்கப்படுகிறது.

ஆசிரியர்களோடு கலந்தாலோசித்து அடுத்தநாள் தேர்வுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கலாம். தேர்வு அறையில் கண்காணிப்பு பணியினை சிறப்பாக மேற்கொள்ள ஆசிரியர்களுக்கு உரிய அறிவுரை வழங்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

வினாத்தாள் கட்டுக்காப்பாளர்கள் தேர்வுக்கான வினாத்தாட்களை உரிய நேரத்தில் வழங்கிடுமாறு தெரிவிக்கப்படுகிறது.

 

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.