TO ALL HMs/ PRINCIPALS -10 மற்றும்12ம் வகுப்புகளுக்கான 26.10.2018 முதல் நடைபெறவுள்ள அலகுத்தேர்வு சார்பான அறிவுரைகள்

அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கவனத்திற்கு,

10 மற்றும்12ம் வகுப்புகளுக்கான 26.10.2018 முதல் நடைபெறவுள்ள அலகுத்தேர்வு நேரம் பிற்பகல் 1.30 முதல் 4.00 வரை நடத்தும்படி மாற்றம் செய்யப்படுகிறது, தேர்விற்கான வினாத்தாள்கள் 26.10.2018அன்று காலை 10.00 மணிக்கு சார்ந்த வினாத்தாள் பகிர்வு மையத்தில் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ( அனைத்துத் தேர்வுகளுக்கும் வினாத்தாட்கள் ஒரே கட்டாக எடுத்துக்கொள்ளவும்). அந்தந்த தேர்வுக்குரிய பாட ஆசிரியர்கள் மாணவர்களுக்கு உரிய பயிற்சியினை காலை 9.00 மணி முதல் 1.00 மணி வரை வழங்கப்படும்போது நிச்சயமாக மாலை நடைபெறுகின்ற தேர்வினை  மாணவர்கள் தன்னம்பிக்கையோடு எழுதுவதற்கு ஏதுவாக இருக்கும் என்பதால் அனைத்து பாட ஆசிரியர்களும் ஒருங்கிணைந்து செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

           மேற்கண்டவகையில் அந்தந்த பள்ளியில் தேர்வுகள்முறையாக நடைபெறுவதை  உறுதிசெய்யுமாறும் அதற்கேற்ப திட்டமிடுமாறும் தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்