கருணை அடிப்படையில் பணி வாய்ப்பு – பள்ளிக் கல்வித் துறையின் கீழ் பணிபுரிந்தபோது பணிக்காலத்தில் –   இறந்த அரசு ஊழியர்களின் விவரம் / கருணைஅடிப்படையில் பணிவாய்ப்பு கோரிய விவரங்களை  ஆண்டு வாரியாக உடனடியாக அனுப்பிட தெரிவித்தல் –  சார்பு

அரசு உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,

பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் தொடக்க / நடுநிலை / உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளிகள் / அனைத்து கல்வித்துறை அலுவலகங்களில் பணிபுரிந்தபோது பணிக்காலத்தில் 11.07.2016 முதல் 31.08.2024 வரையில் இறந்த அரசு ஊழியர்களின் விவரம் /  கருணைஅடிப்படையில் பணிவாய்ப்பு கோரிய விவரங்களை அனைத்துவகை அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் இணைப்பில் உள்ள படிவத்தில் பூர்த்தி  செய்து 16.09.2024 காலை 11.00 மணிக்குள் இவ்வலுவலக A1  பிரிவில் தனிநபர் மூலம் ஒப்படைக்க தெரிவிக்கப்படுகிறது.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.