மார்ச்/ ஏப்ரல் 2018ல் நடைபெற்று முடிந்த மேல்நிலை இரண்டாமாண்டு, முதலாமாண்டு பொதுத்தேர்வு சார்பான பற்றுச்சீட்டுகளை 17.04.2018 அன்று பி.ப.4.00 மணிக்கு ஆற்காடு, இராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஒப்படைக்க கோருதல்

அனைத்து மேல்நிலை தேர்வு மைய முதன்மைக்கண்காணிப்பாளர்கள்,

மார்ச்/ ஏப்ரல் 2018ல் நடைபெற்று முடிந்த மேல்நிலை இரண்டாமாண்டு, முதலாமாண்டு பொதுத்தேர்வு சார்பான தேர்வு மைய உழைப்பூதிய பற்றுச்சீட்டு, மதிப்பீதிய பற்றுச்சீட்டு, சில்லரைச் செலவின இரசீதுகள் அசல் மற்றும் நகல்கள் மற்றும் ஆசிரியர்கள், பணியாளர்களின் வருகைப்பதிவேடு ஆகியவற்றை இரண்டு நகல்களில் 17.04.2018  அன்று மாலை 4.00 மணிக்குள் ஆற்காடு, ஸ்ரீ இராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மைய மதிப்பீட்டு முகாமில் ‘ஆ5’ பிரிவு எழுத்தரிடம் ஒப்படைக்குமாறு அனைத்து மேல்நிலைத் தேர்வு மைய முதன்மைக்கண்காணிப்பாளர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

CLICK HERE TO DOWNLOAD THE INSTRUCTIONS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

குறிப்பு

மேல்நிலை இரண்டாமாண்டு மற்றும் முதலாமாண்டு தனித்தனியாக இணைப்பில் காணும் விவரங்களின்படி ஒப்படைக்கப்படவேண்டும்.