24.02.2020 அன்று பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக கொண்டாடுதல் மற்றும் இறைவணக்க கூட்டத்தின்போது உறுதிமொழி எடுக்க கோருதல்

அனைத்துவகை தொடக்க/நடுநிலை/உயர்நிலை/ மேல்நிலைப் தலைமையாசிரியர்கள் / மெட்ரிக் பள்ளிகள் முதல்வர்கள்,

முன்னாள் மாண்புமிகு முதலமைச்சர் டாக்டர் ஜெ.ஜெயலலிதா அவர்களின் பிறந்த நாளான 24.02.2020 ”மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம்” அனுசரிக்க அறிவிக்கப்பட்டுள்ளதால்  24.02.2020 அன்று பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக கொண்டாடும்படியும்  மற்றும் இறைவணக்க கூட்டத்தின்போது  உறுதிமொழி எடுக்க கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகள் , உறுதிமொழி மற்றும் அரசாணையினை பதிவிறக்கம் செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை தொடக்க/நடுநிலை/உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் / மெட்ரிக் பள்ளிகள் முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும், அனைத்துப்பள்ளிகளிலும் காலை இறைவணக்க கூட்டத்தின்போது  பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து உறுதிமொழி எடுத்து அதற்கான அறிக்கை மற்றும் புகைப்படம் இவ்வலுவலக மின் அஞ்சலுக்கு (velloreceo@gmail.com) அனுப்பிவைக்கும்படியும் அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

CLICK HERE TO DOWNLOAD THE PLEDGE

CLICK HERE TO DOWNLOAD THE LETTER AND PLEDGE

CLICK HERE TO DOWNLOAD THE G.O.