Month: January 2025

தேர்வுப் பணி – பிப்வரவரி -2025 மேல்நிலை இரண்டாமாண்டு செய்முறை தேர்விற்கான புறத்தேர்வர்கள் நியமன ஆணை பெற்று செல்ல தனிநபர் மூலம் பள்ளி தலைமை ஆசிரியரின் முகப்புக் கடிதத்துடன் பெற்று செல்ல தெரிவித்தல் – தொடர்பாக

அனைத்து வகை மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு மேல்நிலை இரண்டாமாண்டு செய்முறைத் தேர்வு பிப்ரவரி 2025  – புறத்தேர்வர்கள் நியமன ஆணை நாளை காலை 01-02-2025 அன்று முற்பகல்  10.00 மணி முதல் வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக நேர்முக உதவியாளர் ( மேல்நிலை ) அவர்களிடம் தங்கள் பள்ளிகான முகப்பு கடிதத்தினை வழங்கி தங்கள் பள்ளிக்குரிய ஆணையினை பெற்று செல்லுமாறு தெரிவிக்கலாகிறது. //ஒம் .செ.மணிமொழி// முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர். பெறுநர் அனைத்து வகை மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர்கள் நகல் மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை/தனியார்)  வேலூர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர்நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது

பள்ளிக் கல்வி – மாதிரி பள்ளிகளில் பயின்ற முன்னாள் மாணவர்களின் அனுபவங்கள்  – வருகின்ற கல்வியாண்டில் மாதிரி பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை அதிகரித்தல் – பிப்ரவரி 2025 – இடைநிலை/ மேல்நிலை – செய்முறை தேர்வுகள் சார்ந்து – அனைத்து அரசு மாதிரி /நகரவை/ ஆதிதிராவிடர் நல உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் – கூட்டம் நடத்துதல் – சார்பு.

CIRCULARS
0538 b1 2025Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டடம்.

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு தொடர்பாக ஒன்றிய அளவில் நடைபெற்ற கட்டுரை போட்டி, வாசகம் எழுதுதல் போட்டி மற்றும் கவிதை போட்டிகளில் முதல் இடத்தில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்குதல் – தொடர்பாக

பள்ளி மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு கட்டுரை போட்டி, கவிதைப் போட்டி மற்றும் வாசகம் எழுதுதல் (Slogan) போன்ற போட்டிகள்   23.01.2025 அன்று  ஒன்றிய அளவில் நடத்தப்பட்டது. இதில் முதல் இடங்களில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு 31.01.2025 அன்று மாலை 3.00 மணியளவில் Katpadi, Mettukulam Sub Beam CBSC பள்ளியில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் பரிசுகள் வழங்கப்படும் என வட்டாரப் போக்குவரத்து அலுவலரின் கடித ந.க.எண்.அ1/00038/2025, நாள். 30.01.2025 கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே கீழ்காணும் படி இணைக்கப்பட்டுள்ள ஒன்றிய அளவில் முதல் இடத்தில் பெற்ற மாணவர்கள் பரிசுகள் வழங்கும் விழாவில் கலந்துக் கொள்ளும் பொருட்டு மாணவர்களை சார்ந்த பொறுப்பாசிரியருடன் பாதுகாப்பாக அழைத்துச் செல்ல உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு

தேர்வுகள்-வேலூர் மாவட்டம்- மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகள். மார்ச்-2025 மாற்றுத்திறன் கொண்ட பள்ளி மாணவர்களுக்கு தேர்வின் போது சலுகைகள் வழங்க ஆணை பெறப்பட்டது -பள்ளிகளுக்கு தெரிவித்தல் -தொடர்பாக

அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு scribe proceedings 2025Download DIRECTOR ORDER VLREDownload பெறுநர், அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் ,வே.மா. நகல் , மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) வே.மா,தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது. மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் ) வே.மா,தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.

மாணவர் பாதுகாப்பு ஆலோசனை குழு மற்றும் மாணவர் மனசு பெட்டி திறக்கப்பட்ட விவரம் – தொடர்பாக

அனைத்து வகை பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு இவ்வலுவலக கடித ந.க.எண்.4723/ஆ5/2024, நாள். 25.11.2024 மற்றும் 22.01.2025 நாளிட்ட கடிதம் வாயிலாக பள்ளிகளில் பள்ளி அளவில் அமைக்கப்பட்டுள்ள மாணவர் பாதுகாப்பு ஆலோசனை குழு மூலம் கூட்டம் நடத்த தெரிவிக்கப்பட்டது. தற்போது பள்ளி கல்வி இயக்ககம் மூலம் இப்பொருள் சார்பான விவரங்கள் GOOGLE FORM மூலமாக கோரப்பட்டுள்ளது. எனவே கீழ்காணும் படி இணைக்கப்பட்டுள்ள GOOGLE FORM-ல் கோரப்பட்டுள்ள விவரங்களை உடனடியாக பூர்த்தி செய்யுமாறு அனைத்து வகை பள்ளித் தலைமையாசிரியர்கள் / முதல்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.     Click below link and fill the form  https://forms.gle/ojymqZRq23zgM4yZA //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் அனைத்து வகை பள்ளித் தலைமையாசிரியர்கள், வேலூர் மாவட்டம். நகல்- மாவட்டக் கல்வி அலுவலர்கள்,

தேர்வுகள்-வேலூர் மாவட்டம்- மார்ச் 2025 மேல்நிலை முதலாம் மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வு விடுபட்ட / பார்கோடு இல்லாத / சேதமடைந்த முகப்புத்தாட்கள்  விவரப்பட்டியல் -தொடர்பாக.

damage top sheetDownload ANNEXURE A & B (1)Download //ஓம்‌// முதன்மைக் கல்வி அலுவலர்  வேலூர் நகல்: 1. பள்ளிக் கல்வி இயக்குநர், சென்னை-6- தகவலுக்காக, கனிவுடன் அனுப்பப்படுகிறது. 2. வேலூர் மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர்கள் தகவலுக்காக அனுப்பப்படுகிறது. 3. வேலூர் மாவட்ட கல்வி அலுவலர்(இடைநிலை /தனியார் பள்ளிகள்)-தக்க நடவடிக்கைக்காகவும் அனுப்பப்படுகிறது.

பள்ளிக் கல்வி – தியாகிகள் தினம் – 30.01.2025 அன்று காலை 11.00 மணிக்கு இந்திய விடுதலைப் போராட்டத்தில் உயிநீத்த தியாகிகளுக்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்துதல் மற்றும் தீண்டாமைக்கு எதிராக உறுதிமொழி – எடுத்தல் – தொடர்பாக

504.B5.29.01.2025 ( தீண்டாமைக்கு எதிரான உறுதிமொழி)Download    //ஒப்பம்// முதன்மைக்  கல்வி அலுவலர்,        வேலூர். பெறுநர் – அனைத்து வகை பள்ளி தலைமையாசிரியர்கள், வேலூர் மாவட்டம். நகல்- வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கு தகவலுக்காக பணிந்து அனுப்பப்படுகிறது. மாவட்டக் கல்வி அலுவலர், (இடைநிலைக் கல்வி / தனியார் பள்ளிகள் / தொடக்கக் கல்வி) வேலூர் மாவட்டம். (தொடர் நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு அனுப்பப்படுகிறது)

பள்ளிக் கல்வி – தேசப்பிதா மகாத்மா காந்தியின் கனவை நனவாக்கும் வகையில் அவரது நினைவு நாளான 30.01.2025 அன்று தேசிய தொழுநோய் ஒழிப்பு தினம்  – அனைத்து பள்ளிகளிலும் உறுதிமொழி ஏற்க கோருதல்  – சார்பாக

399.B5.29.01.2025 (தேசிய தொழுநோய் ஒழிப்பு தினம் உறுதிமொழி)Download தேசிய தொழுநோய் ஒழிப்பு தினம் உறுதிமொழிDownload //ஒப்பம்// முதன்மைக்  கல்வி அலுவலர்,   வேலூர். பெறுநர் – அனைத்து வகை பள்ளி தலைமையாசிரியர்கள், வேலூர் மாவட்டம். நகல்- மாவட்டக் கல்வி அலுவலர், (இடைநிலைக் கல்வி / தனியார் பள்ளிகள் / தொடக்கக் கல்வி) வேலூர் மாவட்டம். (தொடர் நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு அனுப்பப்படுகிறது) நகல் – துணை இயக்குநர் மருத்துவப் பணிகள் (தொழுநோய்) வேலூர்  – 1.

பள்ளிக்கல்வி – வேலூர் மாவட்டம் – SMC மூலம் பணிநியமனம் செய்யப்பட்ட பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர்களின் ஜனவரி 2025 மாதம் பணிபுரிந்த விவரம் கோருதல் – தொடர்பாக

CIRCULARS
அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, SMC மூலம் பணிநியமனம் செய்யப்பட்ட பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர்களின் சனவரி 2025 மாதம் பணிபுரிந்த விவரம் மற்றும் அதற்கான காரணம் ஆகியவற்றை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து சனவரி 2025 மாத தெளிவான வருகைப் பதிவேட்டு நகலை இணைத்து தனிநபர் மூலமாக நாளை 31.01.2025 மாலை 04.00 மணிக்குள் இவ்வலுவலகத்தில் மறுநினைவூட்டுக்கு இடமின்றி சமர்ப்பிக்குமாறு அனைத்து அரசு/நகரவை/உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. SMC பணியாளர்களின் அசல் வருகைப் பதிவேடு தவறாமல் சரிபார்ப்புக்காக அலுவலகத்திற்கு உடன் கொடுத்தனுப்ப வேண்டும் என சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. மேலும் டிசம்பர் 2024 மாதத்திற்கு ஊதியம் பெற்று வழங்கிய ECS நகல் மற்றும் பற்றுச்சீட்டுடன் இணைத்து சமர்ப்பிக்குமாறும