2023 -2024ஆம் கல்வியாண்டிற்கான மாநில அளவிலான பாரதியார் தின/ குடியரசு தின ஜுடோ, வாள்சண்டை, சாலையோர மிதிவண்டி ஆகிய புதிய விளையாட்டு போட்டிகளில் – மாணவ மாணவியர்களை பங்கேற்க தகவல் தெரிவித்தல் – சார்பு

பெறுநர்,

சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள்

அரசு/ நிதியுதவி/ மெட்ரிக் பள்ளிகள்

வேலூர் மாவட்டம்.

2023 -2024ஆம் கல்வியாண்டிற்கான குடியரசுதின/பாரதியார்தின மாநில அளவிலான புதிய விளையாட்டு போட்டிகளான ஜுடோ, வாள்சண்டை, சாலையோர மிதிவண்டி ஆகிய போட்டிகள் பெரம்பலூர் மாவட்டத்தில் 25.01.2024 முதல் 28.01.2024 வரை நடைபெற உள்ளது. மேலும் அதன்பொருட்டு வேலூர் மாவட்டத்தின் சார்பாக மாநில அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவ மாணவியர்களை உரிய பாதுகாப்புடன் அழைத்து சென்று போட்டியில் பங்கேற்க செய்ய உடற்கல்வி ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தும்படி சார்ந்த தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. மேலும் போட்டியின் விவரங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

  முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.