2021ஆம் ஆண்டிற்கான அரசு/தனியார் தொழிற் பயிற்சி நிலையங்களில் ஆன்லைன் (Online) கலந்தாய்வு மூலம் பயிற்சியாளர்கள் www.skilltraining.tn.gov.in இணைய தளம் மூலம் மாணவர் சேர்க்கை மேற்கொள்ள 04.08.2021 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ள விவரத்தை தெரிவித்தல்

அனைத்துவகை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,

 அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், வேலூர்-10 – 2021ஆம் ஆண்டிற்கான அரசு/தனியார் தொழிற் பயிற்சி நிலையங்களில் ஆன்லைன் (Online) கலந்தாய்வு மூலம் பயிற்சியாளர்கள் www.skilltraining.tn.gov.in இணைய தளம் மூலம் மாணவர் சேர்க்கை மேற்கொள்ள   04.08.2021 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. எனவே, பயிற்சியாளர்கள் (மாணவர்கள்) சேர்க்கை மேற்கொள்ள உதவிடும் வகையில் தங்கள் பள்ளியில்  10/12 வகுப்பில் தேர்ச்சிப்பெற்ற, இடைநின்ற/ தோல்வியுற்ற மாணவர்கள் விவரங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்புவைக்கும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

’முதல்வர்,

அரசினர் தொழிற்பயிற்சி நிலையம்,

வேலூர்.’

CLICK HERE TO DOWNLOAD THE DETAILS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்