15 வயது முதல் 18 வயது வரை உள்ள 10,11 மற்றும் 12ம் வகுப்புகளில் பயிலும் மாணவ/மாணவியருக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான – 03.01.2022 மற்றும் 04.01.2022 ஆகிய தேதிகளில் பள்ளிகளில் நடைபெற்ற தடுப்பூசி முகாமில் தடுப்பூசி செலுத்தப்பட்ட விவரம்

அனைத்து அரசு/நகரவை/அரசுநிதியுதவி/சுயநிதி பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் /சி.பி.எஸ்.இ பள்ளி முதல்வர்களுக்கு,

15 வயது முதல் 18 வயது வரை உள்ள 10,11 மற்றும் 12ம் வகுப்புகளில் பயிலும் மாணவ/மாணவியருக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான – 03.01.2022 அன்று பள்ளிகளில் நடைபெற்ற தடுப்பூசி முகாம்களில் இன்னும் தடுப்பூசி செலுத்தாதவர்கள் 04.01.2022 அன்று செலுத்தப்பட்ட விவரம் மற்றும்

04.01.2022 (இன்று) நடைபெறும் முகாம்களில் தடுப்பூசி செலுத்தப்பட்ட விவரத்தினை இன்று மாலை 3.00 மணிக்கு முதன்மைக்கல்வி அலுவலக பணியாளர்கள் தொடர்பு கொள்ளும்போது தெரிவிக்கும் வகையில் தயார்நிலையில் வைக்கும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Nodal பள்ளி தலைமையாசிரியர்கள் தங்கள் Nodal Point-ற்கு உட்பட்ட பள்ளிகளில் தடுப்பூசி செலுத்தப்பட்ட மாணவ/ மாணவியர் விவரங்களை சேகரித்து தயார் நிலையில் வைத்துக்கொண்டு முதன்மைக்கல்வி அலுவலகத்தில் இருந்துதொடர்பு கொள்ளும்போது தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் மேற்படி விவரங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்புகளை Click செய்து உள்ளீடு செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர்கள், வேலூர்