10, 12ஆம் வகுப்புகளுக்கு சிறப்பு வகுப்புகள் பள்ளி பாடவேளை நேரத்திற்கு மிகாமல் தலைமையாசிரியர் முன்னிலையில் மாணவர்களின் பெற்றோர்களின் அனுமதியுடனும், ஆசிரியகளின் விருப்பத்தின்படியும் சிறப்பு வகுப்புகள் திட்டமிடப்பட்டு நடத்துதல்

அனைத்து தலைமையாசிரியர்கள் மற்றும்  முதல்வர்கள் கவனத்திற்கு,

10, 12ஆம் வகுப்புகளுகளில் உள்ள சராசரி மாணவர்களின் கவனச்சிதலின்றி கற்றலில் ஆர்வம் ஏற்படவும், பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற ஏதுவாக சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவதால், சிறப்பு வகுப்புகள் பள்ளி பாடவேளை நேரத்திற்கு மிகாமல் தலைமையாசிரியர் முன்னிலையில் மாணவர்களின் பெற்றோர்களின் அனுமதியுடனும், ஆசிரியகளின் விருப்பத்தின்படியும் சிறப்பு வகுப்புகள் திட்டமிடப்பட்டு நடத்தப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.