10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் 100% தேர்ச்சி வழங்கிய ஆசிரியர்களுக்கான பாராட்டு விழா மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் வி.ஐ.டி. வேந்தர் அவர்கள் தலைமையில் 07.09.2019 அன்று மாலை 4.00 மணிக்கு வி.ஐ.டி. வளாக அண்ணா கூட்ட அரங்கில் நடைபெறும் பாராட்டு விழாவில் இணைப்பில் உள்ள ஆசிரியர்கள் தவறாமல் கலந்துகொள்ள தெரிவித்தல்

அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ ஆசிரியர்களுக்கு,

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் 100% தேர்ச்சி வழங்கிய ஆசிரியர்களுக்கான பாராட்டு விழா மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் வி.ஐ.டி. வேந்தர் அவர்கள் தலைமையில் 07.09.2019 அன்று மாலை 4.00 மணிக்கு வி.ஐ.டி. வளாக அண்ணா கூட்ட அரங்கில் நடைபெறும் பாராட்டு விழாவில் இணைப்பில் உள்ள ஆசிரியர்கள் தவறாமல் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

சார்ந்த ஆசிரியர்களை சம்மந்தப்பட்ட தலைமையாசிரியர்கள் கூட்டத்தில் கலந்துகொள்ளும் வகையில் விடுவித்தனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இணைப்பு பட்டியலில் குறிப்பிட்டுள்ள இருக்கை எண்ணின்படி (Seat No.) இருக்கையில் அமருமாறு ஆசிரியர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மேலும், இப்பட்டியலில் விடுபட்டுள்ள 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் 100% தேர்ச்சி வழங்கிய ஆசிரியர்கள் இருப்பின் கீழே கொடுக்கப்பட்டுள்ள  Link-ஐ பயன்படுத்தி நாளை (05.08.2019)  மாலைக்குள் விவரங்களை உள்ளீடு செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE LIST OF TEACHERS

இதுவரை விவரங்களை அலுவலகத்தில் சமர்ப்பிக்காதவர்கள் (மட்டும்) கீழே கொடுக்கப்பட்டுள்ள  Link-ஐ பயன்படுத்தி விவரங்களை உள்ளீடு செய்யவும்

CLICK HERE TO ENTER DETAILS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.