+1, +2 விடைத்தாள் திருத்தும் முகாம் 05.04.2019க்குள் முடிக்க வேண்டியுள்ளதால் இதுவரை விடுவிக்கப்படாத முதுகலை ஆசிரியர்கள் மற்றும் கணினி பயிற்றுநர்களை உடனடியாக விடுவித்து உரிய விடைத்தாள் திருத்தும் முகாம் பணிக்கு அனுப்பும்படி தெரிவித்தல்

தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கவனத்திற்கு,

+1 +2  விடைத்தாள் திருத்தும் முகாம் 05.04.2019க்குள் முடிக்க வேண்டியுள்ளதால் இதுவரை விடுவிக்கப்படாத முதுகலை ஆசிரியர்கள் மற்றும் கணினி பயிற்றுநர்களை உடனடியாக விடுவித்து உரிய விடைத்தாள் திருத்தும் முகாம் பணிக்கு அனுப்பும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது. தவறும் பட்சத்தில் போதிய ஆசிரியர்கள் இல்லாததால் குறித்த நேரத்தில் முகாம் பணி நிறைவுபெறாததற்கு தாங்களே முழு பொறுப்பேற்க நேரிடும் என்றும், தங்கள் பெயர் இயக்குநர் அவர்களுக்கு மேல் நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்படும் என அனைத்து தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

முதன்மைக்கல்வி அலுவலர்,

வேலூர்.