01.01.2022 அன்றைய நிலவரப்படி அரசு/ நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்விற்கான உத்தேச முன்னுரிமை பட்டியல் வெளியிட்டது. மேல்முறையீடு பெறப்பட்டமை. திருத்திய முன்னுரிமைப்பட்டியல் வெளியிடப்பட்டது. சுழற்சிப் பட்டியல் வெளியிடுதல்- 28.01.2022 அன்று காட்பாடி, அனைவருக்கும் கல்வி அலுவலகத்தில் (SSA) காலை 8.30 மணிக்கு கலந்தாய்வு நடைபெறுதல்

அரசு/ நகராட்சி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,

இணைப்பில் உள்ள செயல்முறைகள் மற்றும் அரசு/நகரவை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் பதவி உயர்விற்கான முன்னுரிமைப்பட்டியலை பதிவிறக்கம் செய்து தங்கள் பள்ளி முதுகலை ஆசிரியர்கள் மற்றும் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் 28.01.2022 அன்று காலை 8.30 மணியளவில் காட்பாடி. காந்திநகர், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி அலுவலகத்தில் (SSA) நடைபெறும் கலந்தாய்வில் கலந்தகொள்ளும் வகையில் விடுவித்தனுப்பும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்