வேலூர் மாவட்டத்தில் உள்ள சில மெட்ரிக் மற்றும் CBSE பள்ளிகள் சனி,ஞாயிறுகிழமைகளில் பள்ளிகள் செயல்படுவதாக பெற்றோர்களிடமிருந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளது, அரசு அறிவித்துள்ளவாறு சனி, ஞாயிறுக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படக் கூடாது என முதன்மைக் கல்வி அலுவலராலும், பல முறை இவ் இணையதளம் மூலமாகவும் தகவல் தெரிவித்தும் பள்ளிகள் செயல்படுவது வருத்தத்திற்குரிய செயலாகும். எனவே அனைத்து மெட்ரிக் மற்றும் CBSE பள்ளி முதல்வர்கள் / தாளாளர்களுக்கு அரசு அறிவித்துள்ள சனி ,ஞாயிறுக் கிழமைகளில் பள்ளிகள் செயல்படக் கூடாது என மீள திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது

// ஒப்பம்//

// க.முனுசாமி //

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்