மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு செய்முறைத் தேர்வுகள் தொடர்பான அறிவுரைகள் வழங்குதல் -சார்பு

அனைத்து வகை மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

இத்துடன் சென்னை அரசு தேர்வுகள் இயக்ககத்திலிருந்து பெறப்பட்ட கடிதம் இணைத்து அனுப்பலாகிறது. கடிதத்தில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து வகை  மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். செய்முறை தேர்விற்கு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை தயார்நிலையில் இருக்க உரிய அறிவுரைகளை வழங்கி நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

ஓம்.செ.மணிமொழி

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்

பெறுநர்

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்

நகல்

மாவட்டக் கல்வி அலுவலர் ( இடைநிலை/ தனியார்) வேலூர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர்நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.