மேல்நிலை  முதலாமாண்டு  பொதுத் தேர்வு முடிவுகள் 19-05-2023 வெளியிடப்பட்டமை

அனைத்து அரசு / நகரவை / நிதியுதவி / ஆதிதிராவிடர் நல   மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின்  கவனத்திற்கு

நடைபெற்று முடிந்த மேல்நிலை  முதலாமாண்டு  பொதுத் தேர்வு முடிவுகள் 19-05-2023 அன்று வெளியிடப்பட்டது. மேல் நிலை முதலாம் ஆண்டு தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கான கற்றல் கையேடு பாட வாரியாக தற்போது வழங்கபட்டுள்ளது மேல்நிலை முதலாம் ஆண்டு தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு இத்தேர்ச்சி கையேட்டினை வழங்கி அனைவரும் வருகின்ற துணைத் தேர்வு  எழுதச் செய்து அனைவரும் தேர்ச்சிபெறும் வகையில் நடவடிக்கை எடுக்குமாறு. தலைமை ஆசிரியர்கள் சார்ந்த  முதுகலை ஆசிரியர்களுக்கு தெரிவித்து வருகின்ற திங்கட்கிழமை (22-05-2023) முதல்   தோல்வியுற்ற அனைத்து மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தி தோல்வியுற்ற அனைத்து மாணவர்களையும் தேர்ச்சி பெற நடவடிக்கை மேற்கொள்ளுமாறு  அனைத்து அரசு / நகரவை / நிதியுதவி / ஆதிதிராவிடர் நல   மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் இக்கையேட்டினை தங்கள் பள்ளிக்குரிய Edwize Vellore -> DATA->USER ID மற்றும் PASSWORD -ஐ பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ள அனைத்து அரசு / நகரவை / நிதியுதவி / ஆதிதிராவிடர் நல   மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மீள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இணைப்பு :  கையேடு பாடவாரியாக

க.முனுசாமி M.Sc, M.A, B.Ed, M.Phil, MBA

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்