மேல்நிலை முதலாமாண்டு சிறப்பு துணைத் தேர்வு ஜீன் 2018 நுழைவுச்சீட்டு பெறப்படாதவர்கள் விவரம்

அனைத்து வகை மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

மார்ச் 2018 மாதத்தில் நடைபெற்று முடிந்த மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வில் தோல்வியடைந்து ஜீலை 2018 மாதத்தில் நடைபெறவுள்ள முதலாமாண்டு சிறப்பு துணைத் தேர்வு எழுத விண்ணப்பித்து தற்போது வரை நுழைவுச்சீட்டு பெறப்படாத மாணவர்களின் விவரங்களை சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலகத்தில் 04-07-2018 அன்று மாலை 04.00 மணிக்குள் ஒப்படைக்குமாறு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

ஒப்படைக்கப்பட வேண்டிய ஆவணங்கள்

  1. மார்ச் 2018 நுழைவுச்சீட்டு . 2 நகல்கள்
  2. ஜீலை 2018 தேர்வு எழுத தேர்வு கட்டணம் செலுத்திய விவரம்-2 நகல்கள்
  3. மார்ச் 2018 மதிப்பெண் பட்டியல் 2 நகல்கள்

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலுர்

 

பெறுநர்

அனைத்து வகை மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் / மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்

 

நகல்

மாவட்டக் கல்வி அலுவலர்

வேலுர் / திருப்பத்துர் / இராணிப்பேட்டை/ அரக்கோணம்/ வாணியம்பாடி