மேல்நிலை இரண்டாமாண்டு செய்முறைத் தேர்வு மதிப்பெண் பட்டியல்கள் ஒப்படைத்தல்

தேர்வுகள் தனி கவனம் 

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

16-04-2021 முதல் நடைபெற்று வரும் மேல்நிலை இரண்டாமாண்டு  செய்முறைத் தேர்வுகள் தொடர்பான மதிப்பெண் பட்டியல்களை காட்பாடி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் செய்முறைத் தேர்வுகள் முடிந்த  மறுநாள் அன்றே ஒப்படைக்கப்பட வேண்டும். 

மேலும் செய்முறைத் தேர்வில் பணிபுரிந்த ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கான மதிப்பூதியம், உழைப்பூதிய பற்றுச் சீட்டுக்களை காட்பாடி,  கல்புதுர் அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட வேண்டும். 

அகமதிப்பீட்டு விவரங்கள் வேலுர் மாவட்டக் கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட வேண்டும்.

 

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலுர்

பெறுநர்

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்

நகல்

மாவட்டக் கல்வி அலுவலர் வேலுர்  அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.