மிக மிக அவசரம்-2022-2023 கல்வியாண்டு மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வு –மார்ச் /ஏப்ரல் -2023 13.03.2023 மற்றும் 14.03.2023 நடைபெற்ற தமிழ்பாட தேர்விற்கு வருகை புரியாத மாணவர்களின் விவரம் உடனடியாக இணைப்பில் காணும்  படிவத்தில் ஒரு களமும் விடுபடாமல் பூர்த்தி செய்து உடன்  Google Forms –ல்  பதிவேற்றம் செய்து ஒரு பிரதியினை 22.03.2023 மாலை 3.00 மணிக்குள் வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக ஆ4 பிரிவில் சமர்பிக்குமாறு அனைத்து அரசு மற்றும் நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

மேலும் 17.03.2023 மாணவர்களின் விவரம் கோரப்பட்டதில் ஒரு சில பள்ளித் தலைமையாசிரியர்கள் எந்த தகவலும் அளிக்காமல் உள்ளனர். இப்பணி மிகவும்  முக்கியத்துவம் வாய்ந்ததால் தனிகவனம் செலுத்துமாறு அனைத்து அரசு மற்றும் நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மீள  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

https://forms.gle/aFMbf1tReGtXXyBS7

ஒப்பம் க.முனுசாமி

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்

பெறுநர்

அனைத்து வகை அரசு மேல்நிலைப்பள்ளி / நிதியுதவிப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் வேலூர் மாவட்டம்

நகல்

வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை ) தகவலுக்காவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.