பள்ளிக்கல்வி – 2022-2023 மானியக் கோரிக்கையில் அறிவிக்கப் பட்ட சிறந்த பள்ளித் தலைமையாசிரியர்களுக்கான அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது வழங்க தலைமையாசிரியர்கள் குறைந்த பட்சம் மூன்று ஆண்டுகள் பணிபுரிபவர்கள் விபரம் கோரியது – தொடர்பாக

பெறுநர்,

அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்கள்

அரசு உயர்/மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம்.

2022-2023 மானியக் கோரிக்கையில் அறிவிக்கப் பட்ட சிறந்த பள்ளித் தலைமையாசிரியர்களுக்கான அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது வழங்க தலைமையாசிரியர்கள் குறைந்த பட்சம் மூன்று ஆண்டுகள் பணிபுரிபவர்கள் விபரம் வழிக்காட்டு நெறிமுறைகளின் படி தகுதிவாய்ந்த அரசு உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் உரிய ஆவணங்களுடன் (நிபந்தனைகளுக்குட்பட்டு) 2022-2023 ஆண்டிற்கான “அண்ணா தலைமைத்துவ“விருதுக்கான கருத்துருவினை தயார் செய்து 3 (மூன்று) நகல்கள் உரிய ஆவனங்களுடன் 19.01.2024க்குள் இவ்வலுவலகத்தில் நேரில் சமர்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.         

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.