பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 – விருப்ப பாடங்கள் தேர்வு எழுதுவது சார்பான சுற்றறிக்கை

இடைநிலை கல்வி விடுப்புச் சான்றிதழ் பொதுத் தேர்வு மார்ச் 2019  தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் கவனத்திற்கு

10ம் வகுப்பு இதர பாடங்களான உருது, தெலுங்கு, இந்தி, கன்னடம், பிரென்ச், மலையாளம், சமஸ்கிருதம் ஆகிய பாடங்களை 14-03-2019 மற்றும் 15-03-2019 ஆகிய நாட்களில் மொழித் தேர்வு எழுதிய மாணவர்கள் 23-03-2019 அன்று நடைபெறவுள்ள விருப்ப பாடங்களுக்கான தேர்வினை எழுத அனுமதி இல்லை  எனவே சார்ந்த தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் இது சார்பான விவரத்தினை மாணவர்களுக்கு தெரியப்படுத்த கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலுர்

 

பெறுநர்

பத்தாம் வகுப்பு தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள்

 

நகல்

மாவட்டக் கல்வி அலுவலர்

திருப்பத்துர் / வேலுர் / அரக்கோணம் / இராணிப்பேட்டை / வாணியம்பாடி தொடர் நடவடிக்கைக்காக அனுப்பலாகிறது.