நிவர் புயல் காரணமாக பள்ளி வளாகம் மற்றும் பள்ளி கட்டிடங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் (Damages) விவரங்களை உள்ளீடு செய்ய கோருதல்

அனைத்து அரசு/நகரவை/ஆதிதிராவிட நல உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

நிவர் புயல் காரணமாக பள்ளி வளாகம் மற்றும் பள்ளி கட்டிடங்களில், சுற்றுச்சுவர் ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் (Damages) மற்றும் இடிபாடுகள் இருப்பின்  உடனடியாக பொதுப்பணித்துறைக்கு தெரிவித்தும், பள்ளி வளாகத்தில் மரம் விழுந்திருப்பின், தண்ணீர் தேங்குதல்  மற்றும் பள்ளி வளாகத் தூய்மை செய்தல் போன்றவற்றை உள்ளாட்சி அமைப்புபிற்கு (local body) தெரிவித்து உடனடியாக சரிசெய்ய நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/நகரவை/ஆதிதிராவிட நல உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும், கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை Click  செய்து உடனடியாக இன்று பிற்பகல் 1.00 மணிக்குள் விவரத்தை உள்ளீடு செய்யும்படியும், இணைப்பில் உள்ள படிவத்தி பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தலைமையாசிரியர் கையொப்பத்துடன் இவ்வலுவலக ‘அ5’ பிரிவில் ஒப்படைக்கும்படியும் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO ENTER THE DETAILS

CLICK HERE TO DOWNLOAD THE FORM

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.