தேர்வுப் பணி – பிப்வரவரி -2024 மேல்நிலை இரண்டாமாண்டு செய்முறை தேர்விற்கான புறத்தேர்வர்கள் நியமன ஆணை பெற்று செல்ல தனிநபர் மூலம் பள்ளி தலைமைஆசிரியரின் முகப்புக் கடிதத்துடன் பெற்று செல்ல தெரிவித்தல் – தொடர்பாக

அனைத்து வகை மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

மேல்நிலை இரண்டாமாண்டு செய்முறைத் தேர்வு பிப்ரவரி 2024  – புறத்தேர்வர்கள் நியமன ஆணை நாளை காலை 09-02-2024 அன்று முற்பகல்  10.00 மணி முதல் வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக நேர்முக உதவியாளர் ( மேல்நிலை ) திரு.லோ.ஜெய்சங்கர் அவர்களிடம் தங்கள் பள்ளிகான முகப்பு கடிதத்தினை வழங்கி தங்கள் பள்ளிக்குரிய ஆணையினை பெற்று செல்லுமாறு தெரிவிக்கலாகிறது.

குறிப்பு

இணைப்பில் காணும் இணைப்பு பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் தங்கள் பள்ளி செய்முறைத் தேர்வு இணைப்பு பள்ளியாக செயல்படுவதால், செய்முறைத் தேர்வு மையத்தினை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இணைப்பு

ஒப்பம் செ.மணிமொழி

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்.

பெறுநர்

அனைத்து வகை மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர்கள்

நகல்

மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை/தனியார்)  வேலூர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர்நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது