தேர்வுகள் -பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு மார்ச் /ஏப்ரல் -2023 -பள்ளி மாணவர்கள் பெயர்ப்பட்டியல் -திருத்தங்கள் மேற்கொள்ள கடைசி வாய்ப்பு வழங்குதல் -சார்பு

அனைத்து வகை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

இத்துடன் இணைக்கப்பட்டுள்ள அரசுத்தேர்வுகள் இயக்குநர் அவர்களின் செயல்முறைகளின்படி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்விற்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழில் தேர்வர்களது(தலைப்பெழுத்து) பெயர் (ஆங்கிலம் /தமிழ் ),தாய் மற்றும் தந்தை பெயர், பிறந்த தேதி, புகைப்படம் பயிற்றுமொழி (Medium of Instructions) மற்றும் மேல்நிலை இரண்டாமாண்டு +2 பொதுத் தேர்விற்கான மதிப்பெண் பட்டியலில் தேர்வர்களது தலைப்பெழுத்து ,பெயர் (ஆங்கிலம் /தமிழ் ), பிறந்த தேதி, புகைப்படம் பயிற்றுமொழி (Medium of Instructions) மொழிப்பாடம் (first language ) ஆகியவற்றில் உள்ள திருத்தங்களை மேற்கொள்ளவும் பள்ளியின் பெயரில் (ஆங்கிலம்/தமிழ் )திருத்தங்களை மேற்கொள்ளவும் தற்போது இறுதியாக ஒரு வாய்ப்பு பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்டுள்ள இனங்களில் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டி இருப்பின்,தலைமை ஆசிரியர் மாணவரின் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் /மதிப்பெண் பட்டியல் நகலில் உரிய திருத்தங்கள் மேற்கொண்டு, சான்றொப்பமிட்டு அதனை வேலூர், கல்புதூர் ,அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் 12.06.2023 அன்று பிற்பகல் 5.00 மணிக்குள் ஒப்படைக்குமாறு அனைத்து வகை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு மீள தெரிவிக்கப்படுகிறது.

இணைப்பு

ஒப்பம்

க.முனுசாமி

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்

பெறுநர்

அனைத்து வகை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம்

நகல்

வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார் ) தகவலுக்காகவும் தொடர்நடவடிக்கைக்காகவும் அனுப்பப்படுகிறது.

வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி )அவர்களுக்கு தகவலுக்காக அனுப்பப்படுகிறது.