தமிழ் வளர்ச்சி துறையின் 2021 – 2022 ஆண்டிற்கான – “நாட்டிற்காகப் பாடுபட்ட தலைவர்களின் பிறந்த நாளன்று பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டிகள் ஆண்டு தோறும் நடத்தி பரிசுகள் மற்றும் பாராட்டுகள் ஆண்டுதோறும் வழங்குதல் சார்ந்து.

அனைத்துவகை உயர்/ மேல்நிலைப்பள்ளிகள் தலைமை ஆசிரியர், தமிழ் வளர்ச்சி துறையின் 2021 – 2022 ஆண்டிற்கான மானியக் கோரிக்கையின் அறிவிப்பிற்கிணங்கநாட்டிற்காகப் பாடுபட்ட தலைவர்களான மகாத்மா காந்தி. ஜவகர்லால் நேரு. அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின்   பிறந்தநாளன்று  மாவட்ட அளவில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டிகள் நடத்தி பள்ளிக்கு ஒரு மாணவர் வீதம் தெரிவு செய்தமாணவர்களை  30.11.2021 (நாளை ) காலை 10.00 மணிக்கு ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது. பெயர் பதிவு செய்த மாணவர்களை மாவட்ட அளவிலான போட்டியில் கலந்துகொள்ளும் வகையில் பொறுப்பு ஆசிரியருடன் அனுப்பிவைக்கும்படி அனைத்துவகை உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்