சுற்றறிக்கை – தேர்தல் அவசரம்

அனைத்து வகை உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு – தேர்தல் பணி ஆணை பெற்றவர்கள் ஆசிரியர்கள்/ ஆசிரியரல்லாதோர் அனைவரும் 18.04.2024 அன்று தேர்தல் வகுப்பு நடக்கும் மையத்திற்கு உரிய நேரத்திற்குள் சென்று ஆணையினை பெற்று தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள வாக்கு சாவடி மையத்திற்கு சென்று எவ்வித புகாருக்கும் இடமளிக்காவண்ணம் கவனத்துடன் பணி மேற்கொள்ள அறிவுரை வழங்கிட அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

பெறுநர்,

அனைத்து வகை பள்ளித் தலைமையாசிரியர்கள்,

வேலூர் மாவட்டம்.